Sunday, July 12, 2015

ஒரு சிஷ்யன் இறைவனை உணர ஓர் ஆழ்ந்த அனுபவம்.


     'ஒரு யோகியின் சுயசரிதை'-யில் ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், தான் ஒரு பள்ளிமாணவனாக இருந்த 
பொழுதே கிடைக்கப்பெற்ற ஓர் ஆன்மீக படிப்பினையை விளக்கமாக பகிர்ந்துகொள்கிறார் .அவருடைய பெற்றோர், இறையருளில் திளைத்து முதிர்ந்த ஒரு குருவின் அருளாசியால் பிற்ந்த நான்காவது  மகன் 
இந்த யோகி அவர்கள். 





இவருடைய பெற்றோர் வைத்த பெயர் முகுந்தன் என்பதாகும்.



எட்டு குழந்தைகளை தாய் அன்பின் அரவணைப்போடு இதிஹாஸ, புராண கதைகளினமுதத்தையும் இணைத்தே வர்ஷித்து வளர்த்து வந்தாள்.முகுந்தன் உயர்நிலை-பள்ளி படிப்பை, தந்தையின் விருப்பப்படி இடையுரின்றி முடித்திருந்தான். முகுந்தனுடைய பதினோராவது வயதிலேயே, பக்தையாக வாழ்ந்துவந்த தாய், பரகதி அடைந்துவிட்டாள். இறக்குமுன்பாக அவர், ஒரு அருளாளர் வாயிலாக தான் அறிந்திருந்த ரஹசியத்தை, அவருடைய அருட்கட்டளைப்படி, மூத்தமகன் அனந்தன் மூலமாக,மகன் முகுந்தனிடம் ஒப்படைத்திருந்தாள்.           

உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருந்த முகுந்தன் பள்ளிமாணவன் மட்டு
மல்ல.முகுந்தனுடைய தாய் அறிவித்திருந்த விஷயங்களின், ஆன்மீக ஆழங்கள், முகுந்தனுடைய அன்மாவில்
 ஆழமாக பதிந்துள்ளவையே.முகுந்தனுடைய அன்னையை சந்தித்த அந்த அருளாளர் ஒரு தேய்வீக 'தாயத்தையும்' உடன் அளித்திருந்தார்.அந்த தாயத்தையும் முகுந்தனிடம், மூத்தமகன் முலம்




ஒப்படைக்கவேண்டிய தருணத்தையும் குறிப்பிட்டிருந்தார், அந்த அருளாளர். முகுந்தனின் அன்னை, அந்த அருளாளரின் கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றியிருந்தாள்

. ஆன்மிக தளத்தில், முகுந்தன் பக்குவமாக முன்னேற, முந்தைய பிறவிகளில் அவருடன் தொடர்புள்ள பலப்பல மகான்களின் அருட்செயல்கள் ஒரு வலை போல் பின்னிக்கொண்டு முகுந்தனை சூழ்ந்து நிற்பதை நம்மால் உணரமுடிகிறது.
      ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்,தன் பன்னிரெண்டாவது வயதில் முகுந்தன் என்ற உயர்நிலை-பள்ளி மாணவனாக அண்ணன் அனந்தன் ஒப்படைத்த அந்த சிறு பெட்டியைப்-பெற்றுக்கொள்ளும்பொழுது,                      


முகுந்தன் எந்த மனநிலையில் ஏற்றான் என்று அறிவது அவசியமாகிறது. "யோகானந்தராக" அந்த மனநிலையை தெளிவுபடுத்துகிறார். பெட்டியை ஏற்றவுடன், அந்த தாயத்து என் வசத்தில் வந்தவுடன், என் ஆன்மீக விழிப்பின்
ஜ்வலிக்கும் ஒளிப்பிழம்பு, என்னை ஆட்கொண்டதை உணர்ந்தேன்; என் ஆன்மாவின் ஆழ்தளத்தில் உரைந்திருந்த பல நினைவுகள் தூண்டப்பட்டு விழித்தெழுந்தன. அஸாதாரணமான அந்ததாயத்து, வட்டவடிவில் அமைந்திருந்தது. மேலும் அது காலத்தைக்கடந்து நிற்கும் பழமையுடன் தொடர்புடயதாக காணப்பட்டது.வடமொழி(ஸம்ஸ்க்ருத) எழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்தது. என்னுடய கடந்த காலங்களில், பல பிறவிகளில் என்னை ஸூக்ஷ்மமாக வழி நடத்திய குருமார்களால் அனுப்பப்பட்டுள்ளாது என்று அறிந்துகொண்டேன். மேலும், இந்த தாயத்துடன் தொடர்புடயதாக ஒரு முக்யத்வம் அமைந்திருந்தது. இது "ஸூக்ஷ்ம-லோகத்தில்" படைக்கப்பட்டது; இயற்கையாகவே குறைந்த கால-அளவில் மறைந்துவிடக்கூடியது. இது சம்பந்தப்பட்ட "ரஹஸியங்கள்", வெளியிடப்படமுடியாத காரணங்களால்,"ரஹஸியங்களாகவே" பாதுகாக்கப்படுகின்றன; பாதுகாக்கப்படவேண்டும். இறைவனுடய தெய்வீகப்பேரரசின் தெய்வீகப்பெரும் கட்டளைகள் மதிக்கப்பட்டு, போற்றப்படவேண்டியவை என்பது மட்டுமல்ல; அவை மீறுதல் என்ற நினைப்புக்கும், கேள்விக்கணைகளுக்கும், வாதப்ரதிவாதங்களுக்கும் அப்பாற்பட்டவை; அப்பாற்பட்டவையே என்று கூறுவதையும் இன்றியமையாததாகவே உணருகின்றேன். அந்த தாயத்து, முகுந்தனுடய அன்னையின் செய்தியின்படி, "அன்னை, ஒரு முன்பின் அறிந்திராத 
மஹானுடய அருட்செய்தியின்படி, மறுநாள் தியானத்தில் ஈடுபட்டிருந்த நிலயில்   
அன்னயின் கையில் அந்த தாயத்து அருளப்பட்ட பொருளாகவே வந்துசேர்ந்தது."

No comments: